பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மருத்துவமனையிலிருந்து டிசார்ஜ் ஆனார்.
நேற்று கிருஷ்ணகிரி நிகழ்ச்சிக்காக சென்றிருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று பெங்களூர் மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை தமிழக முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இந்நிலையில், அமைச்சர் நலமடைந்ததை அடுத்து அவா் இன்று மருத்துவமனையில் இருந்து டிசார்ஜ் ஆனார்.
Tags :