சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் சுப்ரீம் கோர்ட் கிளை

by Staff / 14-08-2023 04:51:48pm
சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் சுப்ரீம் கோர்ட் கிளை

சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரையை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட ஐந்து நகரங்களில், உச்ச நீதிமன்ற கிளை அமையுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, பா. ஜ. , - எம். பி. , சுஷில்குமார் மோடி தலைமையில் செயல்பட்டு வருகிறது.இக்குழுவில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம். பி. , க்கள், 31 பேர் உள்ளனர். தமிழகத்தில், தி. மு. க. , வை சேர்ந்த ராஜ்யசபா எம். பி. , யும், மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, காங்கிரசை சேர்ந்த மாணிக்கம் தாகூர் போன்றோர், இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். நீதித்துறை நடவடிக்கை மற்றும் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில், இந்தக் குழு ஆய்வு நடத்தியது. உச்ச நீதிமன்ற விதிமுறைகள், சட்ட கமிஷன் அறிக்கைகள், நீதித்துறையிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல் அடிப்படையில், நீதித்துறையில் மேற்கொள்ள வேண்டிய சில சீர்திருத்தங்களை, இந்தக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. குழுவின் அறிக்கை, இம்மாதம், 7ம் தேதி, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via