உயிரை மாய்க்கக் கூடாது: மாணவா்களுக்கு வேண்டுகோள்

by Staff / 15-08-2023 04:05:35pm
உயிரை மாய்க்கக் கூடாது: மாணவா்களுக்கு வேண்டுகோள்

மத்தியில் நிகழப் போகும் அரசியல் மாற்றத்தால் நீட் சுவா் உதிா்ந்து விழும்; எனவே, நம்பிக்கை இழந்து மாணவா்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டை மாணவா் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிா்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். நீட் தேர்வு எனும் பலிபீடத்தில் பலியானவா்கள் பட்டியலில் ஜெகதீஸ்வரன் சோந்து விட்டது மிகக் கொடூரமானது. எந்தச் சூழ்நிலையிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எந்த மாணவரும், எப்போதும் எடுக்க வேண்டாம்.

 

Tags :

Share via