இந்திய குடிமகன் ஆனார் அக்‌ஷய் குமார்

by Staff / 15-08-2023 04:00:50pm
இந்திய குடிமகன் ஆனார் அக்‌ஷய் குமார்

இந்திய குடியுரிமை பெற்றுவிட்டதாக இந்தி நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய் குமார் கடந்த 2000ஆம் ஆண்டு கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், கனடா குடியுரிமையை துறந்துவிட்டு இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக அண்மையில் கூறியிருந்தார். இதனையடுத்து, இந்திய குடியுரிமையைப் பெற்றுவிட்டதாக அவர் சமுகவலைதளத்தில் கூறியுள்ளார். அதன்படி, 'இதயமும், குடியுரிமையும் இந்தியன்' என தெரிவித்துள்ள அவர் குடியுரிமை சான்றிதழை பகிர்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via