வண்டலூர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

by Staff / 17-09-2023 01:23:55pm
வண்டலூர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை என்பதால் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 180 வகையான 2500க்கும் மேற்பட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில தொடர் விடுமுறை காரணமாக வண்டலூர் பூங்காவில் காலை முதலே பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பார்வையாளர்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்துக் கொண்டும் விலங்குகளை கண்டு ரசீது கொண்டும் மகிழ்ந்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via