. 1.50 கோடி மோசடி - பெண் கைது

by Staff / 18-08-2023 02:04:47pm
. 1.50 கோடி மோசடி - பெண் கைது

பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் சரளை பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் அவரது மனைவி ரங்கநாயகி. இவர்கள் தொழில் செய்வதற்காக, தங்களது ₹3 கோடி மதிப்பிலான இடம் மற்றும் வீட்டு பத்திரங்களை அவர்களுக்கு அறிமுகமான ஆறு பேர் கொண்ட ஒரு கும்பலிடம் கடன் பெற்று தருவதற்காக கொடுத்துள்ளனர். அந்த கும்பல் அந்த பத்திரங்களை வங்கியில் வைத்து ரூ. 1. 50 கோடி கடன் பெற்று தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் தற்போது பல்லடம் பகுதியைச் சேர்ந்த பிரவீனா(41) என்பவரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று நபர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via