மாணவர்கள் உயிரிழப்பு - மத்திய அரசுக்கு கவலையில்லை
நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில், மதுரை தவிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. அதன்படி, சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நடத்தப்படும் திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், “நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்கள் பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை. ஆதிக்ககாரர்களால் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் போராட்டம் இது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வால் மருத்துவராகும் வாய்ப்பை இழந்து உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
Tags :