வேலூரில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

by Staff / 20-08-2023 12:14:19pm
வேலூரில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடத்தப்பட்ட சூர்யகலா என்பவரது பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சூர்யகலாவுக்கு அடிக்கடி உதவி செய்துவந்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண் தாய்க்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பச்சிளம் ஆண் குழந்தையை கடத்தியுள்ளார். குழந்தையை கடத்திய பத்மா என்ற பெண் சென்னை தப்ப முயன்றபோது காஞ்சிபுரத்தில் போலீசார் அவரை கைது செய்தனர். குழந்தை திருடு போன 8 மணி நேரத்தில் காவல் துறையினர் குழந்தையை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்ததை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

 

Tags :

Share via