கிரேனில் இருந்து நிலை தடுமாறி விழுந்தவர் பலி

by Staff / 20-08-2023 01:58:15pm
கிரேனில் இருந்து நிலை தடுமாறி விழுந்தவர் பலி

ராயபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 55. இவரது மகன் ஜெகதீஷ், 29. இவர்கள், பொன்னேரி நெடுஞ்சாலை, எலந்தனுாரில் நடத்தி வந்த கம்பெனி ஒன்றை விற்று விட்டனர். கம்பெனியில் உள்ள இரும்பு பொருட்களை எடுப்பதற்காக, உறவினர்களான கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த நரசிம்மன், 56, அவரது மகன் தயாகர், 26, உள்ளிட்ட நான்கு பேரும், நேற்று முன்தினம் இரவு அங்கு சென்றனர். அப்போது, இரும்பு பொருட்களை எடுக்க 'கிரேன்' பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரேனில் கொக்கி பொருத்துவதற்காக, நரசிம்மன் அமர்ந்திருந்தார்.அப்போது, எதிர்பாராத விதமாக, கிரேனில் இருந்து நிலை தடுமாறி நரசிம்மன் விழுந்து பலத்த காயமடைந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது.

 

Tags :

Share via