சிறுமியை கடத்திச் சென்று திருமணம் லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

by Staff / 25-08-2023 03:50:00pm
சிறுமியை கடத்திச் சென்று திருமணம் லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

பெரம்பலூர் மாவட்டம் பீல்வாடி கிராமம் காலனித் தெருவை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மகன் ஆனந்தராஜ். இவர் லாரி டிரைவராக உள்ளார். இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலூர் கிராமம் கீழக் காலனித் தெருவை சேர்ந்த செல்வராஜ் இவரது மகள் 17 வயதான சிறுமியை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போனார். இதனால் அவரது தந்தை செல்வராஜ் உறவினர்கள் தோழிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தேடி விசாரித்து வந்தனர். விசாரணையில் ஆனந்தராஜ் என்பவர் சிறுமியை திருமணம் செய்வதற்காக கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் தலைமையிலான போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனந்தராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via