பிரக்ஞானந்தாவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

by Staff / 30-08-2023 01:27:04pm
பிரக்ஞானந்தாவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

FIDE உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றி இந்தியாவின் இளம் வீரர், பிரக்ஞானந்தா இன்று தமிழகம் திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் அவருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை திரும்பிய பிரக்ஞானதாவை அவரது பள்ளி நண்பர்கள், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் விமான நிலையம் சென்று வரவேற்றனர். பின்னர் அரசு வாகனத்தில் அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். செஸ் உலகக்கேப்பையை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via