ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாப பலி

by Staff / 30-08-2023 01:29:47pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாப பலி

பீகார் மாநிலம் ரோஹ்தாஸில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். சிவசாகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பக்னாரி அருகே இரண்டாவது தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் மீது ஸ்கார்பியோ கார் மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஐவர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அப்பகுதியினர் மற்றும் போலீசாரும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்தில் காரின் முன்பக்கம் முழுவதும் அப்பளமாக நொறுங்கியது.

 

Tags :

Share via