மனைவி கருப்பாக இருந்ததால் மின்சாரம் பாய்ச்சி கொலை

by Staff / 30-08-2023 03:13:26pm
மனைவி கருப்பாக இருந்ததால் மின்சாரம் பாய்ச்சி கொலை

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில், ஒரு நபர் தனது மனைவியை கறுப்பாக இருந்ததால் கொலை செய்துள்ளார். சங்கராம்பூர் புரந்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஷியாம்லால் தனது மனைவி பிரியங்கா தேவியிடம் (23) 'நீ கறுப்பாக இருக்கிறாய் தேவையில்லாமல் திருமணம் செய்து கொண்டேன்’ என்று அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டு கடும் கோபத்தில் இருந்த மனைவியை ஷியாம் கரண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்துள்ளார். இதில் பிரியங்கா தேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via