நல்லாசிரியர் விருது: பட்டியலை வெளியிட்டது பள்ளிக்கல்வி துறை

by Staff / 04-09-2023 11:46:36am
நல்லாசிரியர் விருது: பட்டியலை வெளியிட்டது பள்ளிக்கல்வி துறை

தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதுக்கு செங்கை, காஞ்சி மாவட்டத்தில் 18 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப். 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் அன்றைய தினம் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்னும் நல்லாசிரியர் விருதாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய விருது தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னையில் செப். 5-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

அதன்படி செங்கை மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் விவரம் வருமாறு: தலைமை ஆசிரியர் க. சங்கர், தலைமை ஆசிரியர் தி. வி. லதா, தலைமை ஆசிரியர் சு. மீனாட்சி, சுகந்தி, பட்டதாரி ஆசிரியர் கிரேஸ் பெட்ரீஷியா மாலினி, முதுகலை ஆசிரியர் ம. சச்சிதானந்தம், தலைமை ஆசிரியர் ப. இரா. சூரியகலா, முதுகலை ஆசிரியர் ச. நாகராஜி, முதல்வர் ந. புவனேஸ்வரி ஆகியோருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via