உறக்க நிலைக்கு சென்ற விக்ரம் லேண்டர்

by Staff / 04-09-2023 04:09:05pm
உறக்க நிலைக்கு சென்ற விக்ரம் லேண்டர்

இந்தியாவின் வரலாற்று வெற்றியை 'சந்திரயான் 3' பதிவு செய்திருக்கிறது. விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானை சுமந்து, சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் இன்று காலை 8 மணி நேரப்படி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. மேலும், லேண்டரும், ரோவரும் செப்டம்பர் 22ல் விழிக்கும் எனவும் இஸ்ரோ எதிர்பார்த்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via