சென்னையில் பயங்கரவாதி கைது

சென்னையில் ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். திருச்சூர் அடிப்படையான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் கைது செய்தனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள். தமிழ்நாடு, கர்நாடக என மாறி, மாறி தலைமறைவாக இருந்த ஐஎஸ் தலைவர் சையது நபில் போலி ஆவணங்கள் மூலம் நேபாளத்திற்கு தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த ஆசிப் என்பவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில், இன்று ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டார்.
Tags :