சென்னையில் இரவீந்திரநாத் தாகூர் சிலை திறப்பு

by Staff / 08-09-2023 01:45:38pm
சென்னையில் இரவீந்திரநாத் தாகூர் சிலை திறப்பு

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை, இராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, சிலை அருகே வைக்கப்பட்டிருந்த தாகூரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன், பொன்முடி, மு.பெ.சுவாமிநாதன், எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன், மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via

More stories