செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

by Staff / 11-09-2023 12:40:50pm
செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில், வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, பல்வேறு கட்ட இழுபறிக்கு பிறகு மீண்டும் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 

Tags :

Share via