புழல் சிறையில் கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல்

by Staff / 13-09-2023 11:55:37am
புழல் சிறையில் கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல்

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் கைதிகள் கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அவற்றை பறிமுதல் செய்யும் போது சிறை காவலர்களிடம் கைதிகள் தகராறு செய்வதும், அவர்களை தாக்குவதும் அரங்கேறி வருகின்றன.இந்த நிலையில் நேற்று 20-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள், விசாரணை சிறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை போதை பொருள் தடுப்பு போலீசாரால் கடந்த மாதம் கைதான சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த சக்திவேல் (வயது 22) என்பவரிடம் நடத்திய சோதனையில் அவர் செல்போன் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்

 

Tags :

Share via