சமயநல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வின் உறவினர்களின் கார்கள் எரிப்பு.
மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலத்தின் உறவினர்களின் கார்கள் வீட்டில் நிறுத்திவைத்திருந்தபோது காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துசென்றுள்ளனர்.கடந்த ஜீன் -25 ஆம் தேதி கருவனூரில் சாமி கோவிலில் மரியாதை அளிப்பதில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பொன்னம்பலம் மற்றும் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் இடையே ஏற்பட்ட மோதலில் கார்கள் எரிக்கப்பட்டது.இந்நிலையில் இரவு மீண்டும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் உறவினர்களது கார்கள் வீட்டில் நிறுத்திவைத்திருந்தபோது எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கார் எரிப்பு சம்பவம் குறித்து சத்திரபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.கடந்த 2001 - 2006 ஆம் ஆண்டு சமயநல்லூர் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : சமயநல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வின் உறவினர்களின் கார்கள் எரிப்பு.