திருப்பதி திருக்குடை ஊர்வலம் - போக்குவரத்து மாற்றம்
சென்னையில் நாளை (செப். 16) திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில் 10 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ள உள்ளனர். எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, காலை 10 மணிமுதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்க்கண்ட இடங்களில், ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில், காலை 8 மணிமுதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என். எஸ். சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்புசாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனஓட்டிகள் ஈ. வே. ரா சாலை, ராஜாஜிசாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சாலை மற்றும் பிரகாசம் சாலையைப் பயன்படுத்தலாம்.
Tags :