சென்னை மற்றும் அதன் புறநகரில் கனமழை-விமானசேவைகள் பாதிப்பு
சென்னை மற்றும் அதன் புறநகரில் இன்று மதியம் முதல் மழை பெய்யத் தொடங்கியது. அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகரில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், சென்னையின் முக்கிய பகுதிகளான, சேப்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர், எழும்பூர், நுங்கம்பாக்கம், மதுரவாயில், திருவேற்காடு, பாடி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. மேலும், சென்னையில் கனமழை காரணமாக 12 விமானங்கள் தாமதமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஐதராபாத், டெல்லி, மும்பை, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 விமான சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்களும் தாமதமாக புறப்பட்டது.
Tags : விமானசேவைகள் பாதிப்பு