அரசு வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் சேர்ந்த ராமு என்பவரது மகள் சிவரஞ்சனி (30). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு அரசு வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். பெருந்துறையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த இவர், நேற்று முன்தினம் வீட்டின் கதவை உள்புறமாக தாளிட்டு விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இறந்து போன சிவரஞ்சினியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருமணமாகாத ஏக்கத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வருகிறது.
Tags :