அரசு மருத்துவமனையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 20-09-2023 01:44:51pm
அரசு மருத்துவமனையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அண்ணாநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கொடுங்கையூா் மீனம்மாள் சிவராஜ் தெருவைச் சேர்ந்தவா் கா. பாலகுரு (34). அண்மையில் நிகழ்ந்த ஒரு விபத்தில் காயமடைந்த இவா், அண்ணாநகா் அன்னை சத்யா நகா் 3-ஆவது அவென்யூவில் உள்ள புகா் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அந்த மருத்துவமனையில் இருந்து பாலகுரு 'டிஸ்சாா்ஜ்' செய்யப்பட்டாா். இதன் பின்னா் அந்த மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்துக்கு வந்த பாலகுரு, அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதைக் கண்ட மருத்துவமனை ஊழியா்கள், அண்ணாநகா் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து, பாலகுருவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
 

 

Tags :

Share via