சுரங்கப்பாதையில் பிணமாக கிடந்த வாலிபர்
சேலம் செவ்வாய்ப் பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் வலது பகுதியில் சுரங்கபாதை உள்ளது. நேற்று காலை இந்த சுரங்க பாதையில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த லாரி டிரைவர்கள் செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர். மேலும் வாலிபர் இறந்து கிடந்த மேம்பாலத்தின் மீது மதுபாட்டில் இருந்தது. இதனால் மேம்பாலத்தின் மீது அமர்ந்து மது குடித்தபோது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து இங்கு வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :