காவிரி நீர் மறுக்கும் கர்நாடகத்தின் இனவெறியைக் கண்டித்து - புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!

by Editor / 02-10-2023 07:40:55pm
காவிரி நீர் மறுக்கும் கர்நாடகத்தின் இனவெறியைக் கண்டித்து - புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!

காவிரியில் புதுச்சேரி - தமிழ்நாட்டுக்குள்ள உரிமையை மறுத்து அடாவடி புரிந்து வரும் கர்நாடகக் காங்கிரசு அரசைக் கண்டித்தும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் இந்திய ஒன்றிய பா.ச.க. அரசைக் கண்டித்தும், புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி இராசா திரையரங்கு எதிரே,  நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் க. அருணபாரதி, கண்டன முழக்கங்கள் எழுப்பி ஒருங்கிணைத்தார்.

தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர்  இரா. மங்கையர்செல்வம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரி அமைப்பாளர் சி. சிறீதர், நாம் தமிழர் கட்சி - தொழிற்சங்கப் பாசறை செயலாளர் த. இரமேசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி தலைவர்  கோ. தமிழுலகன், தமிழர் களம் புதுச்சேரி தலைவர் கோ. அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர்  ஆ. பாவாடைராயன், தமிழ்த்தேசியப் பேரியக்க ஐவேலி கிளைச் செயலாளர் , குமார், புதுச்சேரி வடக்குக் கிளைச் செயலாளர்  தே. சத்தியமூர்ததி, தெற்குக் கிளைச் செயலாளர் ,சே. அசோக்ராசு, மகளிர் ஆயம்   சுவேதா, பிரியா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

காவிரி நீர் மறுக்கும் கர்நாடகத்தின் இனவெறியைக் கண்டித்து - புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!
 

Tags : காவிரி நீர் மறுக்கும் கர்நாடகத்தின் இனவெறியைக் கண்டித்து - புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!

Share via