மலைப்பாம்பை  கையில் ஏந்தி வியப்பை ஏற்படுத்திய ஆளுநர் தமிழிசை 

by Editor / 04-10-2023 10:14:48pm
 மலைப்பாம்பை  கையில் ஏந்தி வியப்பை ஏற்படுத்திய ஆளுநர் தமிழிசை 

உலகில் விலங்குகள் முழு சுதந்திரமாய் வாழ மனிதர்கள் துணை நிற்க வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். உலக விலங்குகள் தினத்தையொட்டி, மிருகக்காட்சி சாலையில்  தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  மலைப்பாம்பு ஒன்றை கையில் ஏந்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், மனிதர்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் எவ்வளவு முக்கியமோ, அதேபோல விலங்குகளின் வாழ்விடமும், வாழ்க்கை முறையும் முக்கியமானதாகும். விலங்குகளுக்கு ஆபத்து விளைவிக்காமல் அவை சுதந்திரமாய் உலகில் வசிக்க மனிதர்களாகிய நாம் அனைவரும் துணை நிற்போம். விலங்குகளை பாதுகாப்பது, அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :  மலைப்பாம்பை  கையில் ஏந்தி வியப்பை ஏற்படுத்தியா ஆளுநர் தமிழிசை 

Share via