வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் ஏன்? -அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

by Staff / 05-10-2023 12:52:53pm
வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் ஏன்? -அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

புதிய வந்தேபாரத் ரயிலுக்கு காவி நிறம் பூசப்பட்டதன் பின்னணியில் எந்தவித அரசியலும் இல்லை மாறாக அறிவியல் காரணங்களே உள்ளது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “மனித கண்களுக்கு 2 நிறங்கள்தான் நீண்ட தூரத்துக்கு அப்பால் இருந்தும் தெளிவாக புலப்படும். அவற்றில் ஒன்று மஞ்சள், இன்னொன்று காவி. ஐரோப்பிய நாடுகளில் 80 சதவீத ரயில்கள் இந்த 2 நிறங்களில் தான் இருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via