திருப்பதியில் இரட்டைக் கொலை
ஆந்திர மாநிலம் திருப்பதியில் வியாழக்கிழமை இரவு இரட்டைக் கொலை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் நாந்தேட்டைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மனிஷா மற்றும் மைத்துனர் ஹர்ஷவர்தன் ஆகியோரை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். லாட்ஜ் ஒன்றில் இந்த கொடூரம் நடந்துள்ளது. இதையடுத்து கொலை செய்தவர் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு போலீசில் சரணடைந்தார். ஹர்ஷ்வர்தன் அவரது மைத்துனரா அல்லது மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீஸ் விசாரணையில் முழு விவரம் தெரியவரும்.
Tags :