கிராம சபை கூட்டத்தில் விவசாயியை எட்டி மிதித்த ஊராட்சி செயலாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

by Staff / 06-10-2023 03:21:28pm
கிராம சபை கூட்டத்தில் விவசாயியை எட்டி மிதித்த ஊராட்சி செயலாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார் குளம் ஊராட்சி கங்கா குளம் பகுதியில்
ஊராட்சி மன்றத்தின் உடைய கிராம சபை கூட்டம் கடந்து இரண்டாம் தேதி நடைபெற்றது. அப்பொழுது விவசாயி ஒருவர் ஊராட்சி மன்றம் குறித்த பல்வேறு கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார் இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் வேகமாக வந்து கேள்விகளை கேட்ட விவசாயி நெஞ்சில் மிதித்து கீழே தள்ளினார் இதில் அவர் நிலை குலைந்து போனார் இது குறித்து நாலு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இதில் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் தலைமறைவானார் இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார் இதன் தொடர்ச்சியாக இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது தாக்குதலுக்கு உள்ளான விவசாயிக்கு வெளிப்புற காயங்கள் இல்லை என்பதால் தங்க பாண்டியனுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Tags :

Share via