ஹமாஸ் மூத்த அதிகாரி பலி - இஸ்ரேல்
காசாவில் ஒரே இரவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் குழுவின் மூத்த அதிகாரி பலியாகியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் குழுவின் தலைமையகம் மற்றும் கமாண்டோ படைகளுக்கு சொந்தமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், ஹமாஸின் மூத்த தலைவரான முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த வார இறுதியில் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினர் பாராகிளைடர்கள் வாயிலாக நுழைந்தனர். இஸ்ரேலுக்குள் பாராகிளைடர்கள் மூலம் நுழையும் திட்டத்தை செயல்படுத்தியதில் அபு முராத் முக்கியப் பங்கு வகித்தவர்.
Tags :