பெண்கள் யாசகம் கேட்கவில்லை, எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம்- என்று கனிமொழி கருணாநிதி பேச்சு

by Editor / 14-10-2023 10:10:58pm
பெண்கள் யாசகம் கேட்கவில்லை, எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம்- என்று கனிமொழி கருணாநிதி பேச்சு

திமுக மகளிர் அணியின் சார்பிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் திமுகத் துணைப்‌ பொதுச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் பேசியதாவது: 

கலைஞரின் உடன்பிறப்பே வார்த்தையின் அர்த்தத்தை கூற பேச்சை தொடங்கிய கனிமொழி கருணாநிதி.
சகோதரர்களே சகோதரிகளே என்று அழைக்காமல், அனைவரையும் சமமாக உடன்பிறப்பே என்று கலைஞர் அழைத்ததை நினைவுக்கூர்ந்து உரையை தொடங்கினார். "ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினால் ஆயிரம் மெழுகுவர்த்தியை ஏற்றி முடியும் அதுபோல அறிவொலி பெற்ற பெண்ணால் சமூகத்தை மாற்ற முடியும்" என்று கலைஞர் கூறினார். பெரியாரின் மகளிர் மாநாட்டில் ஏற்கப்பட்ட கொள்கைகள் கலைஞரின் ஆட்சியில் திட்டங்களாக மாறி சமூகத்தை ஏற்றம்பெற செய்தன.இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறையில் பெண்களை இணைத்து ஆண்களுக்கு பெண்களை காவல் அளிக்க வைத்தார்.கலைஞரின் வழியில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் ஆட்சியின் முதல்நாளில் பெண்களுக்கான இலவச விடியல் பயணத்தை தொடங்கினார்.
படிக்கும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கினார்.வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்தும் சும்மாதான் இருக்கிறார்கள் என்ற பெண்களின் உழைப்பை மதித்து உரிமைத் தொகையை வழங்கியவர்.நாரி சக்தி(பெண்கள் சக்தி)யை நாங்கள் கொண்டாடுகிறோம் என்று மோடி அவர்கள் பொய் கூறிவருகின்றனர்.என்றைக்கும் நடைமுறைக்கே வராத மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து மோடி அரசு பெருமை பேசுகிறது.மணிப்பூர் பெண்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளனர்.கலவரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே.
நாட்டின் முதல் குடிமகளான குடியரசு தலைவரையே கோயிலுக்கு அனுமதிக்கவில்லை,  நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை. 
பாண்டிச்சேரியில் தலித் அமைச்சர் பதவியை விலகும் நிலை உள்ளது.மோடி அரசில் குடியரசுத்தலைவர், அமைச்சர் விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் சாதாரண பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு கல்வி இல்லை- பாதுகாப்பு இல்லை- எதிர்காலம் இல்லை-பெண்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறார்கள்.பெண்கள் யாசகம் கேட்கவில்லை.எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம்- என்று பேசினார்.

 

Tags : பெண்கள் யாசகம் கேட்கவில்லை, எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம்- என்று கனிமொழி கருணாநிதி பேச்சு

Share via