முதல்வர் தலைமையில் 2 நாள் ஆலோசனை

by Staff / 17-10-2023 11:13:13am
முதல்வர் தலைமையில் 2 நாள் ஆலோசனை

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று மற்றும் நாளை என இரு நாட்கள், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. முதல் நாள் கூட்டத்தில், போலீஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார். சட்டம் - ஒழுங்கு, குற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இரண்டாம் நாளில் மாவட்ட கலெக்டர்களுடன் அடிப்படை வசதிகள், வேளாண், நகர்ப்புற வளர்ச்சி, சுகாதாரம், இளைஞர் நலன், உட்கட்டமைப்பு வசதிகள், அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

 

Tags :

Share via

More stories