காய்கறி வியாபாரிக்கு கத்தி குத்து

by Staff / 24-10-2023 01:24:15pm
காய்கறி வியாபாரிக்கு கத்தி குத்து

பண்ருட்டி அருகே எல். என். புரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 56), காய்கறி வியாபாரி. அதேபகுதியை சேர்ந்தவர்கள் குமரன் (வயது42), ராஜா(வயது 40). அண்ணன் தம்பி. இவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசும்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது கோவிந்தன்அதே பகுதியில் இருந்த ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்று உள்ளார்.ஹோட்டலுக்கு வந்த அண்ணன் தம்பி குமரன், ராஜா இருவரும் கோவிந்தனை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால்காயமடைந்த கோவிந்தன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு வழக்கு பதிவு செய்து குமரன் , ராஜா ஆகியோரை வலை வீசி தேடி வருகிறார்

 

Tags :

Share via