ரத்தம் ஏற்றிக்கொண்ட 14 சிறுவர்களுக்கு ஹெச்ஐவி, தொற்று
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு லாலா லஜபதி ராய் மருத்துவமனையில் ஊழியர்களின் அலட்சியத்தால் 14 குழந்தைகளுக்கு ஹெச்ஐவி தொற்று பரவியுள்ளது. தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 வயது முதல் 16 வயது வரை உள்ள 14 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு உள்ளவர்களின் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. ரத்த தானம் செய்யும்போது ஏற்பட்ட தவறு இதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் ஹெச்ஐவி, ஹெபடைடிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேருக்கு ஹெபடைடிஸ் பி, 6 பேர் ஹெபடைடிஸ் சி, 2 பேர் ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Tags :