வெறி நாய் கடித்து 4 ஆடுகள் பலி

by Staff / 25-10-2023 01:18:50pm
வெறி நாய் கடித்து 4 ஆடுகள் பலி

சேந்தமங்கலம் அடுத்த, முத்துகாபட்டி பஞ்சாயத்து செட்டிக்குட்டையை சேர்ந்தவர் மணிமலர்கொடி, 52; இவர், விவசாய தோட்டத்தில், 20க்கும் மேற் க்ஷபட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன் தினம், தோட்டத்தில் உள்ள ஆட்டு பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு, வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்நிலையில், நள்ளிரவில், 10க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் ஆட்டு பட்டியில் புகுந்து, 50, 000 ரூபாய் மதிப்புள்ள, 4 ஆடுகளை கடித்து குதறின. இதேபோன்று, சில நாட்களுக்கு முன், அப்பகுதியில் விவசாயி ராமசாமி, 70, ராஜேந்திரன், 53, ஆகியோரின் விவசாய தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடு, மாடுகள், கன்றுகுட்டிகளை வெறி நாய்கள் கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது. இதனால், விவசாயிகள் மிகவும் அச்சமடைந் துள்ளனர்.வெறி நாய்களை பிடிக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via