இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் 8,500 பேர் பலி

by Staff / 27-10-2023 11:03:13am
இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் 8,500 பேர் பலி

பாலஸ்தீன், இஸ்ரேல் போரில் இரு நாடுகளைச் சேர்ந்த 8,500 பேர் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. காசா மீதான தாக்குதலில் இதுவரை சுமார் 7,000 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் பதில் தாக்குதலில் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 7ஆம் தேதியன்று இரு நாடுகளும் இடையே போர் தொடங்கியது. இன்று, 23வது நாளை எட்டியுள்ளது. காசாவில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமலும், உயிரைக் கையில் பிடித்த படி, பேராபத்தில் சிக்கி உள்ளனர்.

 

Tags :

Share via