தமிழகத்தின் அமைதியைக் கெடுக்க சதிவலை? - பீட்டர் அல்போன்ஸ்

by Staff / 28-10-2023 04:17:36pm
தமிழகத்தின் அமைதியைக் கெடுக்க சதிவலை? - பீட்டர் அல்போன்ஸ்

தமிழகத்தின் அமைதியைக் கெடுக்க சதிவலை பின்னப்படுகிறதா? என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பீட்டர் அல்போன்ஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை அம்பத்தூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் செய்த கலவரம் தமிழகத்தின் அமைதிச் சூழல்பற்றி முக்கிய கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. மிகக் கடுமையாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் இதைப்போன்ற வன்முறை வெறியாட்டங்களை தடுத்து நிறுத்தும். தமிழகத்தின் அமைதியைக் கெடுக்க சதிவலை பின்னப்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த தினம் அம்பத்தூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

 

Tags :

Share via