செல்போன் ஒட்டுக்கேட்பு: ராகுல் காந்தி கடும் கண்டனம்

by Staff / 31-10-2023 01:50:26pm
செல்போன் ஒட்டுக்கேட்பு: ராகுல் காந்தி கடும் கண்டனம்

காங்கிரஸ் எம்பி சசி தரூர், திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோரின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செல்போன் ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல; குற்றவாளிகள் செய்யும் செயல். வழக்கமாக மோடி அமித்ஷாவைத்தான் நம்பர் ஒன், நம்பர் 2 என சொல்வார்கள். ஆனால் உண்மையில் நம்பர் ஒன் அதானி தான். பிரதமர் மோடியின் ஆத்மா கூட அதானியிடம் தான் இருக்கிறது என ராகுல் விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via