நேபாளத்தில் நிலநடுக்கம்.. 130 பேர் பலி

by Staff / 04-11-2023 11:57:46am
நேபாளத்தில் நிலநடுக்கம்.. 130 பேர் பலி

நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 130 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க புவியியல் மையம், நிலடுக்கம் முதற்கட்ட அளவில் 5.6 ரிக்டர் பதிவானதாகவும், 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதன்பின் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள், வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

 

Tags :

Share via