தாயாரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

by Staff / 04-11-2023 03:12:35pm
தாயாரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்வர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் தனது வீட்டு அருகே வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்தநிலையில் விக்னேஸ்வரனுக்கும், அவரது காதலியின் தாயாருக்கும் இடையே திடீரென பிரச்சினை ஏற்பட்டது. இதனால் காதலியின் தாயார் தனது மகளை விக்னேஸ்வரனுடன் பேசக்கூடாது என கண்டித்தார்.காதலியும் விக்னேஸ்வரனுடன் பேசாமல் இருந்தார். இதனால் விக்னேஸ்வரன் இரவில் மதுகுடித்து விட்டு காதலியின் வீட்டுக்கு சென்றார். அப்போது விக்னேஸ்வரனுக்கும், அவரது காதலியின் தாயாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஸ்வரன், காதலியின் தாயாரை கத்தியால் குத்தினார்.வயிறு மற்றும் தோள் பகுதியில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண் ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
 

 

Tags :

Share via