திருநெல்வேலிக்கு கூடுதலாக நான்கு வந்தே பாரத் தீபாவளி சிறப்பு ரயில் சேவை 

by Editor / 08-11-2023 11:01:30pm
திருநெல்வேலிக்கு கூடுதலாக நான்கு வந்தே பாரத் தீபாவளி சிறப்பு ரயில் சேவை 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக நான்கு வந்தே பாரத்  ரயில் சேவையை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.  இதன்படி நவம்பர் 10, 11, 13, 14  ஆகிய நாட்களில் சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06055) சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 05.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் அதே நாட்களில் திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் (06056) மாலை 03.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பயணிகளின் பேராதரவு காரணமாக திருநெல்வேலிக்கு மட்டும் கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது.

 

Tags : திருநெல்வேலிக்கு கூடுதலாக நான்கு வந்தே பாரத் தீபாவளி சிறப்பு ரயில் சேவை 

Share via