முடிவுக்கு வராத ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை: அன்புமணி

by Staff / 09-11-2023 01:41:28pm
முடிவுக்கு வராத ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை: அன்புமணி

ஆம்னி பேருந்துகள் மீண்டும் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக இருக்கும் நிலையில், அவர்களின் தேவைகளை பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் பயணக் கட்டணத்தை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தியுள்ளன. சென்னையிலிருந்து நாளை மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ. 3200, நெல்லைக்கான கட்டணம் ரூ. 3400, கோவைக்கான கட்டணம் ரூ. 3999 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தீபஒளி திருநாள் நிறைவடைந்து வரும் 13-ஆம் நாள் மேற்கண்ட நகரங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கான கட்டணம் இன்னும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ. 4950 கட்டணம் நிர்ணயிக்கப்படுள்ளது. நெல்லையிலிருந்து சென்னைக்கு ரூ. 4120, கோவையிலிருந்து சென்னைக்கு ரூ. 4950 கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆம்னி பேருந்து முன்பதிவுக்கான இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீப ஒளி திருநாளைக் கொண்டாடுவதற்காக கடன் வாங்கிக் கொண்டு சொந்த ஊர் செல்லும் மக்களை கசக்கிப் பிழியும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதும், அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது

 

Tags :

Share via