மனைவி, மாமியாரை வெட்டியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
தூத்துக்குடி 3வது மைல் திருவிக நகரைச் சேர்ந்தவர் செல்லையா மகன் சுப்ரமணியன் (49). இவர் நேற்று இரவு மகிழ்ச்சிபுரம் பகுதியில் தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி சென்ற பயணிகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.கடந்த வருடம் 20. 04. 22 அன்று சுப்ரமணியன் அவரது மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டியதாக தென்பாகம் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் ஜாமீனில் வெளியே வந்த அவர் இருக்க வீடு இல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது சம்பந்தமாக ரயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :