கேரளாவில் இருந்து தப்பிய மாவேயிஸ்ட்கள் தேடுதல் வேட்டை

by Staff / 16-11-2023 04:10:30pm
கேரளாவில் இருந்து தப்பிய மாவேயிஸ்ட்கள் தேடுதல் வேட்டை

கேரளாவில் குண்டடிபட்டு தப்பிய பெண் மாவேயிஸ்டுகள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க தமிழக - கர்நாடக எல்லையில் போலீஸார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் மாநில போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலின் போது 2 மாவோயிஸ்டுகள் சிக்கினர். 2 பெண் மாவோயிஸ்டுகள் குண்டடி பட்டு தப்பியோடி தலைமறைவு வாகி விட்டனர். தப்பிய  2 பெண் மாவோயிஸ்ட்களை கண்டுபிடிக்க வேண்டி ஈரோடு எஸ்பி ஜவஹர் உத்தரவிட்டார். இதையடுத்து கர்நாடக - தமிழ்நாடு மாநில எல்லையான ஆசனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட காரப்பள்ளம், கேர்மாளம் வனச் சோதனை சாவடிகளில் மாவோஸ்ட் போட்டோ ஒட்டி வைத்துள்ளனர். மாவேள்ட்டுகள ஊடுருவளை கண்காணிக்கும் வகையில் ஆசனூர் போலீசார் மற்றும் ஈரோடு மாவட்ட மாவோயிஸ்ட் தனிப்பிரிவு போலீசாரும் சோதனை சாவடியில் கண்கானிப்பு பணியில் ஈடுபடுவதோடு வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதை எஸ். பி ஜவஹர் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

 

Tags :

Share via