தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

by Staff / 16-11-2023 05:22:26pm
தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

திருப்பூர் அவினாசி ரோடு தண்ணீர்பந்தல் காலனி பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 37). இவர் 2-ம் தர பனியன் வியா பாரம் செய்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. இதனால் அவர் மனஉளைச்சலுடன் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலை யில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மணிமாறன் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories