தமிழக மீனவர்கள் 22 பேர் கைது

by Staff / 18-11-2023 02:29:31pm
தமிழக மீனவர்கள் 22 பேர் கைது

பருத்தித் துறை கடற்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அங்கிருந்த 22 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via