514 வாகனங்கள் பறிமுதல்: மாநகராட்சி நடவடிக்கை..
தெருக்களில் போக்குவரத்திற்கு இடையூறாக, கேட்பாரற்று கிடந்த 514 வாகனங்களை மாநகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்துள்ளனர். செப். 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சாலையில் கைவிடப்பட்ட 1, 308 வாகனங்களில் சென்னை காவல்துறை உதவியுடன் 79 நாட்களில் 514 வாகனங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறையின் வாகனங்களை எடுத்து செல்லும் வாகனங்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், கேட்பாரற்ற வாகனங்களை அகற்றும் பணி தாமதமாவதாக கூறப்படுகிறது. எனவே, மீதமுள்ள வாகனங்களை மாநகராட்சியுடன், சென்னை காவல்துறையும் இணைந்து வேகமாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags :