டாஸ்மாக் 3 நாள் மூட உத்தரவு

by Staff / 24-11-2023 02:02:47pm
டாஸ்மாக் 3 நாள் மூட உத்தரவு

திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் 27ம் தேதி வரை டாஸ்மாக்கை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் தீப திருவிழாவையொட்டி நாளை சனிக்கிழமை முதல் 27ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வரவுள்ளதால், பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via