மனைவி குடும்பத்தினரால் தனது வாழ்க்கையை இழந்ததாக கூறி   கபடி வீரர்  வீடியோ வெளியிட்டு தற்கொலை.

by Editor / 23-11-2023 07:47:26pm
மனைவி குடும்பத்தினரால் தனது வாழ்க்கையை இழந்ததாக கூறி   கபடி வீரர்  வீடியோ வெளியிட்டு தற்கொலை.

 

தென்காசி மாவட்டம் 
 பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாபேரி உலகாசிபுரம் தெருவை சேர்ந்த பரிமளம் என்பவரது மகன் அருணாச்சலம் வயது 28 இவர் கபடி வீரராகவும் இருந்து வந்துள்ளார். தனது ஊரில் இருக்கும் கபடி அணியில் விளையாடும் சிறந்த கபடி வீரராகவும் திகழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பாக பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள செட்டியூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகள் பகவதி வயது 25 என்பவரை திருமணம் செய்துள்ளார். பாவூர்சத்திரத்தில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அதோடு சிறு சிறு வியாபாரம் மற்றும் தொழில்களையும் செய்து வந்துள்ளார். மேலும் ஜெய்பூர் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் பேந்தர்ஸ் என்னும் கபடி அணிக்கு தேர்வாகி விளையாடி வருகிறார். இந்நிலையில் திருமணம் முடிந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தனது மனைவி அவரது தந்தை வீட்டிற்கு சென்றதாகவும் தொடர்ந்து தனது தொழில் ரீதியாக மனைவியின் தந்தை பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்ததாகவும் கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது இறப்பிற்கு காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு பின்பு தனது மனைவி குடும்பத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைகளை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டு மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் மயங்கி கிடந்த அருணாச்சலத்தை   அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags : மனைவி குடும்பத்தினரால் தனது வாழ்க்கையை இழந்ததாக கூறி   கபடி வீரர்  வீடியோ வெளியிட்டு தற்கொலை.

Share via